ஞாயிறு, 11 அக்டோபர், 2009

சிறிய முயற்சிகளோடு ஒரு சிறகு விரிகிறது



என்னுடைய ஒரு புதிய முயற்சியாக ஒரு சித்திர கதையை உருவாக்கி கொண்டு இருக்கிறேன், நன்றி லயன் காமிக்ஸ் க்கு , எனது ஓவிய திறமையை எனக்கு தெரிய வைத்ததற்கு.
நிச்சயம் ஒரு கௌ பாய் கதையை தான் உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது , காரணம் உங்களுக்கு சொல்ல தேவையில்லை, கேப்டன் டைகர் கதைகள் தான். வரலாற்று உண்மைகள் கலந்த ஒரு கதையாக என்னுடைய சித்திர கதை இருக்கும். முழுவதும் ஸ்கேன் செய்து இந்த தளத்தில் ஏற்ற இருக்கிறேன், இது என்னுடைய சிறு வயது கனவை நனவாக்கும் ஒரு முயற்சி , அவ்வளவே! வியாபார ரீதியான முயற்சி அல்ல. இந்த சித்திர கதை உங்கள் வரவேற்பை பெற்றால் , சமுக ரீதியான அவலங்களை இளைய சமுதாயத்துக்கு தெரிய படுத்தும் வகையில் சித்திர கதைகளை உருவாக்கும் எண்ணம் உள்ளது. நன்றி நண்பர்களே!